அதிரை சேர்ந்தவர் பஷீர் அஹமது .ஆட்டோ ட்ரைவரான இவர் தன்னுடைய ஆட்டோவில் MSM நகரில் இருந்து ஈ.சி.ஆர் சாலையில் கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மல்லிப்பட்டினத்தில் இருந்து அதிரை பேருந்து நிலையம் நோக்கி வந்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று ஆட்டோ மீது மோதி விட்டு வேகமாக சென்று விட்டது.
இதில் ஆட்டோ ஓட்டுனர் பஷீர் அவர்களின் கை, கால், இடுப்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் பஷீர் அவர்களை மீட்டு அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது. விபத்து குறித்து அதிரை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அதிரை ஈ.சி.ஆர் சாலையில் கடந்து செல்லும் தனியார் பேருந்துகள் எந்த கவலையும் இன்றி அதிக வேகத்துடன் செல்வதால் ஈ.சி.ஆர் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது