வெளிநாடுகளுக்கு தொழிலாளியாக வேலைக்கு செல்பவர்கள் தாங்கள் பணியாற்றும் காலங்களில் உயர்ந்த பதவிகளுக்கு செல்ல முடியுமா வாழ்வில் உயரமுடியுமா என்று தன்னம்பிக்கை இழப்பவர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் தரும் வகையில் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றும் நிறுவனத்தில் தொழிலாளியாக சேர்ந்து பணிபுரிந்து தற்போது நிர்வாக இயக்குநராக உயர்ந்து தன்னம்பிக்கை சிகரமாக ஒளிர்கிறார் ராமநாதரபுரம மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த தமிழர் சாஹுல் ஹமீது.
இவர் கூறியதாவது :
1978ல் துபாயில் தொழிலாளியாக இடிஏ நிறுவனத்தின் எம்பிஎம் கிளீனிங் பிரிவில் எனது பணியை மிககுறைந்த சம்பளத்தில் தொடங்கினேன்.பின்னர் இன்று பல்வேறு டிவிசன்களை உள்ளடக்கிய பெசிலிடிஸ் மேனேஜ்மென்ட் என்றழைக்கப்படும் பிரிவின் நிர்வாக இயக்குநராக உள்ளேன்.அன்று வாங்கிய சம்பளத்தை விட இன்று 100 மடங்கு அதிக பெறுகிறேன்.இன்று இந்நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர்.
அமீரகத்தில் உள்ள நிறுவனங்களிடம் முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டு கிளினிங் பணிகளை மேற்கொள்வது செய்வது எங்களது நிறுவனத்தின் பணியாகும் ஆரம்ப காலங்களில் இது போன்று கிளினிங் பணிகளுக்கு நானும் சென்றுள்ளேன். செய்யும் தொழிலை நான் மிகவும் நேசிப்பேன் அது சுத்தப்படுத்தும் பணியாக இருந்தாலும் அதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவன். அடிக்கடி விடுமுறை எடுக்க மாட்டேன் பணியை நிறைவு செய்து விட்டுதான் அடுத்த செயலுக்கு செல்வேன் .மேலும் புதிய வர்த்தக ரீதியாக வியாபரத்தை அதிக படுத்த எனது நிறுவனத்திற்கு உதவினேன் இப்படி கடும் உழைப்பின் காரணமாக எனது பொறுப்பு உயத்தப்பட்டு சூப்பர்வைர் மேலாளர் என படிபடியாக இன்று நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறேன்.
எனது சிபாரிசில் பணிக்கு வருபவர்களுக்கு சொல்லும் அறிவுரை 'உதவி செய்கிறேன் ஆனால் சலுகை செய்ய மாட்டேன்' என தெரிவித்து விடுவேன் .வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களாக வருபவர்கள் மனம் தளர விடாமல் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி நம்பிக்கையுடன் பணியாற்றினால் நிச்சயம் வாழ்வில் வளம் பெற முடியும்.எக்ஸ்போ 2020 துபாயில் நடைபெற உள்ளது இதனையோட்டி ஆயிரக்கணக்கான பணிகள் உருவாகும் இதனையோட்டி ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
நன்றி:தினகரன்
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது