இந்த சிறுவனும் சமூகசேவகன் தான்!

Irshad Bin Jahaber Ali
0

நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவில் வாழும் 8 வயது சிறுவன் நிதி திரட்டினார்.

அவர் இதுவரை 26,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 16 லட்சம்) நிதி திரட்டியுள்ளார். அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் நீவ் சராஃப்  (8). அவரது பெற்றோர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். நேபாளத்தில் கடந்த மாதம் 25-ஆம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட நீவ் சராஃப், அவர்களுக்கு உதவி செய்வதற்காக நிதி திரட்ட முடிவு செய்தார்.

அதையடுத்து, அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அமெரிக்க-நேபாள மருத்துவ அறக்கட்டளையை அணுகினார். 
அறக்கட்டளை மூலமாக வலைதளப் பக்கம் ஒன்றை உருவாக்கி, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி செய்யுமாறு அவர் வலைதளத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதன்முலம், ரூ. 16 லட்சத்தை நீவ் சராஃப் குழுவினர் திரட்டினர். அதில், நீவ் சராஃப் தனது சொந்தச் சேமிப்பிலிருந்து அளித்த 384 டாலர்களும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 25,000) அடங்கும்
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)