புதிதாக வெளிநாடுகளுக்கு செல்ல 1 லட்சம் கூடுதல் செலவாகும்! ஓர் அதிர்ச்சி தகவல்!

Editorial
3
இந்தியாவிலிருந்து தமிழகம், கேரளாவிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள், கூலி தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். குறிப்பாக ஓமன், ஐக்கிய அரபு நாடுகள், கத்தார், பக்ரைன், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு அதிகளவு டிரைவர், கட்டுமான தொழில், வீட்டு வேலைகள், கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு கூலி வேலைக்காக செல்கின்றனர்.வேலைக்கு செல்லும் இளைஞர்கள் விசா, மருத்துவ பரிசோதனை என அதிகப்பட்சம் ரூ.75 ஆயிரம் வரை செலவு செய்வர். குறிப்பாக குவைத் செல்லும் கூலி தொழிலாளர் ஒருவருக்கு அதிகபட்சமாக ஏஜென்ட்டுக்கு வழங்கும் கமிஷன் உட்பட ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவாகும்.

ஆனால் தற்போது மருத்துவ சோதனைக்கான கட்டணம் ரூ.3,500லிருந்து ரூ.24 ஆயிரமாகவும், விசா ஸ்டாம்பிங் கட்டணம் ரூ.6,000லிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தியதிலிருந்து ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.மேலும் நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களின் முக்கிய நகரங்களில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் குவைத் நாட்டுக்கு செல்வோர் மட்டும் டில்லி, மும்பை, கொச்சி, ஐதராபாத் ஆகிய 4 இடங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் தான் பரிசோதனை செய்ய வேண்டுமென வரையறுக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகம் மட்டுமின்றி இந்த மையங்களிலிருந்து தொலைதூரத்தில் வசிக்கும் அனைத்து கூலி வேலைக்கு செல்வோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் டிராவல்ஸ் நிறுவன ஏஜென்ட்கள் கூறுகையில், ‘மருத்துவ பரிசோதனை, ஸ்டாம்பிங் கட்டணம் உயர்வால் கூடுதலாக ரூ.50 ஆயிரம் செலவு செய்ய வேண்டியுள்ளது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் கிராமப்புற கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விசா வாங்கி கொண்டு செல்வதா, வேண்டாமா என்று லட்சக்கணக்கான இளைஞர்கள் யோசித்து கொண்டுள்ளனர். இக்கட்டணம் குறைந்து மீண்டும் பழையவாறு மாநிலத்தின் முக்கிய நகரங்களில் மருத்துவ சோதனை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்’ என்றனர்.
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

3Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

    3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

    4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

    ReplyDelete
Post a Comment