நிலவிட் சூழும் எழிலைப் பாரு
நினைவிட் சேரும் இறையாசை
மலரிட் கூடும் மகரஞ் சேர
மலருந் தேனும் அருளாகும்
இரையைத் தேடும் பறவை போகும்
இறையைப் பாடும் இனிதாக
கரையைத் தாவும் கடலுக் காக
கடவுட் போடும் வினைபாரு
இருளிற் றானே ஒளியைத் தூவும்
இயல்பைத் தந்த இறையாகும்
அருளைச் சூழ அவனைப் பாடு
அறிவைத் தேடு நிறைவாகும்
அணுவைச் சேர உடலைக் கூடி
அழகுச் சேயும் உருவாகும்
அணுவைக் கூட எவருக் கும்தான்
அசைவைக் காண அவன்வேண்டும்
“கவியன்பன்” கலாம்
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது