வருடா வருடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் டிசெம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு அதை கறுப்பு தினமாக அனுசரித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது வழக்கம். சென்ற வருடங்களைப் போல் இந்த வருடம் த.மு.மு.க சார்பாக தமிழகம் முழுவதும் 50 இடங்களில் இன்று நடைபெற்றது.
தஞ்சையை பொறுத்தவரை தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு நடத்த தீர்மானிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து அதிரை மக்களை அழைத்து செல்வதற்க்காக 17 வாகனங்கள் வந்திருந்தது.
இது போன்று மதுக்கூரிலும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் பாப்பாநாடு அருகே சென்று கொண்டிருந்த பொழுது மர்ம நபர்கள் அந்த வாகணஙளின் மீது கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனை கண்டிக்கும் வகையில் பட்டுக்கோட்டையில் தாக்குதல் புரிந்தவர்களை கைது செய்யக்கோரி அதிரை மற்றும் மதுக்கூர் த.மு.மு.க வினரால் ஆர்ப்பாட்டம் நடத்தி தாக்குதல் புரிந்தவர்களை கைது செய்யக் கோரி கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து பட்டுக்கோட்டைக்கு விரைந்த காவல் துரை உயர் அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களை சமாதானப் படுத்தி அனுப்பினர்.
இதனை தொடர்ந்து தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், சமுக ஆர்வலர்கள், மாற்றுமத சகோதரர்கள் என அலைகடலென மக்கள் திரண்டனர். இதில் கலந்துக்கொண்ட பழ.நெடுமாறன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து த.மு.மு.க வின் முக்கய தலைவர்களும் தங்கள் எழுச்சியான் சொற்ப்பொழிவை நிகழ்த்தினர்.

thanks to: adirai pirai asraf (for nice photos)
ஒன்றுபடுவோம் வென்றுவிடுவோம்
ReplyDelete