வளைகுடா வாழ் அதிரையர்களுக்கு ஓர் நற்செய்தி!

0
 ஐரோப்பாவில் உள்ளதை போன்று அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் ஒரே விசாவை கொண்டு வரும் ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவூதியிலிருந்து வெளியாகும் அரப் நியூஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தை போல் அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் பொதுவான விசா ஒன்றை கொண்டு வருவதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் அதிகாரிகள் மட்டத்தில் நடப்பதாக தெரிகிறது.
 
தற்போது சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தாங்கள் பணிபுரியும் நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல வேண்டுமாயின் தனி விசா பெற்றே செல்ல வேண்டும். இச்சூழலில் பொதுவான விசா கொண்டு வருவது வளைகுடாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.


வளைகுடாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 31 சதவிகிதத்தினர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவான விசா அமல்படுத்தப்பட்டால் வர்த்தகம் வளர்ச்சியுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஏதேனும் ஒரு நாட்டில் வெளிநாட்டவர் யாருக்கேனும் தடை விதிக்கப்பட்டால் ஒட்டு மொத்த வளைகுடா நாடுகளிலும் அது எதிரொலிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)