கடந்த சில நாட்களாக அதிரை
மக்களால் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி அதிரை குளங்களுக்கு ஆற்று நீரை
கொண்டு வருவது. நேற்று அதிரைக்கு இந்த தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று
பள்ளிக்கொண்டான், சேண்டாக்கோட்டை மூலம் அதிரை சி.எம்.பி வாய்க்கால் வழியாக
இந்த தண்ணீர் தற்பொழுது அதிரையின் 20 வார்டு (வள்ளியம்மை நகர்) தாண்டி தண்ணீர்
வந்துக்கொண்டிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி தற்பொழுது கிடைத்துள்ளது.
இன்ஷா அல்லாஹ் இந்த தண்ணீர்
நாளை நமதூர் குளங்களை வந்தடையும் என்று தகவல் கிடைத்துள்ளது.

நம் ஊரின் நலன் கருதி தண்ணீர்க்கொண்டு வர பெரும் முயற்ச்சி எடுத்து பாடு பட்ட எல்லா நல் உள்ளங்களுக்கும் என் மனம்மார்ந்த வாழ்த்துக்கள். அல்லாஹ் உங்களுக்கு நல்கிருபைசெய்வானாக...ஆமீன்..
ReplyDeleteஎன்றும் அன்புடன்
அ.அஹமது மொய்தீன்
RAK - UAE