வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் [ காணொளி இணைப்பு ] !

0
முடியாது போகும் என்று முயல்வதை விடுதல் கண்டு
முடியாத செயலின் எல்லை முற்றிலும் இல்லை இல்லை
விடியாத இரவும் இல்லை விலக்கிடுச் சோம்பல் தொல்லை
தடைகள்தான் வந்தும் தூண்டும் தடகளம் போலத் தாண்டு!

இல்லாமல் போகா வாய்ப்பு இதுவெலாம் மனத்தின் ஏய்ப்பு
புல்லான போதும் கையில் புடமிடும் தங்கம் செய்யும்
வில்லான உறுதி மட்டும் விரைவுடன் முடிவை எட்டும்
சொல்லோடு செயலும் நின்றுச் சோம்பலும் ஒழியும் இன்று!

மல்லாந்துப் படுத்து வீணே மதியையும் சிதைத்தல் தானே?
கல்லாத போழ்தும் நெஞ்சில் காட்டிடும் அக்னிக் குஞ்சாய்ச்
சொல்லாலும் விளங்காச் சிந்தைச் சுடர்விடப் பொறியின் விந்தை
நில்லாமல் உழைக்கும் மெய்யும் நிதர்சனம் இதுவே மெய்யாம்!

உன்மனத்தில்  தோன்றிச் சுட்டும் உதிப்பினால் வெற்றிக் கிட்டும்
பன்முகத்தில் உன்றன் பார்வைப் பளிச்சிடத் தோன்றும் தீர்வே
நன்மையைநீ விரும்பிச் சேர்த்தால் நலமுடன் திரும்பிப் பார்த்தால்
பன்மையில்காண் வழிகள் ஆங்குப் பயனுறச் செழிக்கும் ஓங்கி!

வரிகளின் வரம்பு: பதினாறு அடிகள் மட்டும்
யாப்பிலக்கணம்:
காய்+மா+தேமா(அரையடிக்கு)
+விளம்+மா+தேமா(அரையடிக்கு)

பாடலாசிரியர்: அதிரை கவியன்பன் கலாம் (அபுதபி)
Lyrics: Adirai Kavianban KALAM (Abu Dhabi)

பாடியவர்: அதிரை  பாடகர் ஜஃபருல்லாஹ் (ஜித்தாஹ்)
Singer: Adirai Ilam murasu JAFARULLAH (Jeddah)

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு :
இந்தக் கவிதை நேற்று [ 06-03-2014 ] இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் அதிரை பாடகர் ஜாஃபர் அவர்களின் இனிய குரலோடு ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)