பாலைவனத்திலிருந்து ஒரு பரிதாபக் குரல்!

0








திரியாய்த் தானே வாழ்வினில்
 *****தினமும் எரியும் ஆசைகள்
புரியா மடமை இலாமலே
 *******புரிந்தே நாங்கள்  உணர்வதும் 
தெரியா தொன்றும் அல்லவே
 ********தெரியும் வெளிச்சம் காணவே
சரியா பிழையா விடைகளை
 *******சரியாய்த் தெரியா வாழ்விதே!

இளமை விதையை விதைப்பதால்  
*******இழப்பின் ஈட்டைப் பெற்றிலோம்
வளமை ஒன்றே   பயிரென 
*********வானம் பார்க்கும் உழவராம்
குள்மாயக் கண்ணீர் வேரினுள் 
*********குடமென ஊற்றி உழைத்திடும்
களமெனக் காணும் பாலையில்  
**********காசு வளர்க்கும் மரமிதே

பாலைச் சூடும் உணர்ந்திடா
*******பாழும் மனமும் உன்வசம்
நீலக் கடலைத் தாண்டியே
*******நீயும் இருப்பாய் என்னுயிர்
காலம் பிரித்த காதலைக்
******காதில் சொல்லும் செல்லிடை
கோலம் போடும் வலைதளம்
*********கொடுஞ் சிறையின் மீன்களாய்!

 முகநூல் வாயால் கதைத்திட
********முகமும் காண  விழித்திரை*
சுகமும் ஊடல் பேச்சினில்
*******சுவனம் காண்போம் கணினியில்
அகமும் புறமும் இல்லறம்
********அடையும் இன்பம் இதுவென
பகரும் உலகில் வாழ்வதால்
*******பாழாய்ப் போகும் நாட்களே!    


விடுப்பில் கிடைக்கும் விடுதலை
*********விம்மிக் கரையும் நாட்களும்
அடுத்தி ருக்கும் நட்பினால்
**********அகலும் துயர எண்ணமே
படுத்து றங்கும் பாயிலும்
********பசியைப் போக்கும் உணவிலும்
தொடுத்த குறிப்போ வேறிடம்
*********தொடரும் இதயம் இந்தியா!

தினமும் ஈரம் சேர்த்திட
*******திர்ஹம் செலவு செய்திட
மனமும் ஒப்பி வருவதும்
********மாதம் ஒன்று ஆண்டினில்
கனமாய்ப் பாரம் சேர்ந்ததை
******காய்ந்துக் கருகிப் போனதை
வனமாய்ப் போன மனத்தினை
******வடிநீர் ஊற்றிக் காக்கவே!

பெட்டி நிறையப் பெற்றதும்
*******பிரிவுச் சொரிய இழந்ததும்
கட்டிக் கொண்ட கடனுடன்
********கட்டு டல்கள் சிதைந்ததும்
சுட்டும் விழியை விற்றபின்
*******சொக்கும் கனவுச் சித்திரம்
விட்டில் பூச்சி கவர்ச்சியில்
*******விடையை அறியா விசித்திரம்







கரு:..... கவிமகன் காதர் (kaayal pattinam, India)
உரு: கவியன்பன் கலாம் காதர் (adirampattinam, India)

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)