உலக வரலாற்றில் முதல் முறையாக கிருஸ்தவர்களின் வாட்டிகன் சர்ச்சில் தொழுகை

0
கிருஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நிலவும் மத மாச்சர்யங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முன் முயற்சியாக கத்தோலிக்க கிருஸ்தவர்களின் தலைமை வழிபாட்டு ஸ்தலமான வாடிகன் தேவாலயத்தில் இஸ்லாமிய வழிபாடு நடைபெற உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் போப் பிரான்சிஸ், இத்தாலியில் உள்ள வாடிகன் நகருக்கு வருமாறு இஸ்ரேல் அதிபர் ஷிமொன் பெரெஸ் மற்றும் பாலஸ்தீனிய அதிபர் மஹ்மௌட் அப்பாஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பை ஏற்று அவர்கள் இருவரும் வாடிகனுக்கு செல்லவுள்ளனர். இதனையடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை வாடிகன் தேவாலயத்தில் வழக்கமான பிராத்தனையுடன் இஸ்லாமிய தொழுகையும் நடத்தப்படுகிறது. தொழுகையின் இடையில் திருக் குர்ஆனின் வசனங்களும் வாசிக்கப்படும் என இஸ்ரேல் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வாடிகன் தேவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டு வழிபாட்டு நிகழ்வினை உலகம் முழுவதும் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், சிலுவைப் போர்க் காலத்தில் தொடங்கி பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு இடையில் நிலவும் தீராப்பகையை ஒழித்து, இரு நாட்டுக்கும் இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முன் முயற்சியை போப் பிரான்சிஸ் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
courtesy: muthupet news

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)