புடமிடு தங்கமென புத்துணர்வை யூட்டி
தடம்புர ளாவண்ணம் தக்கவழி காட்டி
நடந்துள தேர்வினில் ஞானமும் கூட்டி
கடந்துதான் செல்லுதே கண்ணிய மாதம்
கடமையைச் செய்ய கருணை வரவாய்
உடனிருந் தாயே உளம்நிறை தோழா
விடைபெறும் முன்னே விழிநீர் சுரந்து
மடைதிறக் கச்செய்த மாதமே சென்றுவா
பட்டினித் தீசுட்ட பக்குவம் பெற்றதால்
மட்டிலா பக்தி வளமுடன் கற்றதால்
கொட்டிடும் கண்ணீரும் கோபம் கழுவியதே
கட்டியே காத்திட்டக் கட்டுப்பா(டு) நோன்புடன்
நட்டமே இல்லா நடுநிசி வித்ருடன்
சட்டமாய்க் கூறும் சகாத்தின் கொடையையும்
திட்டமிட் டோதும் திருமறையின் நன்மையையும்
கட்டியே தந்ததைக் கொண்டுசேர் ரப்பிடம்!
தடம்புர ளாவண்ணம் தக்கவழி காட்டி
நடந்துள தேர்வினில் ஞானமும் கூட்டி
கடந்துதான் செல்லுதே கண்ணிய மாதம்
கடமையைச் செய்ய கருணை வரவாய்
உடனிருந் தாயே உளம்நிறை தோழா
விடைபெறும் முன்னே விழிநீர் சுரந்து
மடைதிறக் கச்செய்த மாதமே சென்றுவா
பட்டினித் தீசுட்ட பக்குவம் பெற்றதால்
மட்டிலா பக்தி வளமுடன் கற்றதால்
கொட்டிடும் கண்ணீரும் கோபம் கழுவியதே
கட்டியே காத்திட்டக் கட்டுப்பா(டு) நோன்புடன்
நட்டமே இல்லா நடுநிசி வித்ருடன்
சட்டமாய்க் கூறும் சகாத்தின் கொடையையும்
திட்டமிட் டோதும் திருமறையின் நன்மையையும்
கட்டியே தந்ததைக் கொண்டுசேர் ரப்பிடம்!
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது