புதன்கிழமையன்று தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கையை ஒட்டிய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலை கொண்டிருந்தது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சற்று நகர்ந்து தெற்கு இலங்கைக்கு அருகில் தற்போது நிலை கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழகம், புதுவையின் கடலோரப் பகுதிகளில் பலத்த மழையோ மிக பலத்த மழையோ வெள்ளிக்கிழமை பெய்யும். உள்மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து அதிரையில் நேற்று காலை முதல் லேசான தூரல் மழை பெய்து வந்தது .இதைதொடர்ந்து நேற்று இரவு முதல் தற்போது வரை அதிரையில் தொடர் மழை பெய்து வருகிறது.இந்த மழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது