அதிரை மேலத்தெருவில் சிதறிக் கிடக்கும் குப்பைகள் அள்ளப்படாத அவலம்! (படங்கள் இணைப்பு)

1
அதிரை மேலத்தெரு தண்ணீர் டாங்கி அருகே அப்பகுதி மக்களால் குப்பைகள் கொட்டப்படுகிறது. இங்கு கொட்டப்படும் குப்பைகள் பல நாட்களாக அள்ளப்படுவது இல்லை.

ஆனால் இப்பகுதியில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள் அதிக காற்று வீசும் போது சாலைகளில் சிதறிக்கிடப்பதை படத்தில் காணலாம். இதனால் அப்பகுதி மக்களுக்கு கொடிய நோய் பரவும் அபாயம் உள்ளது.

அனால் இதை கண்டும் காணாமல் பல நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குப்பைகள் அள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இது போல் அதிரையில் ஒவ்வொரு தெருவிற்க்கு ஒரு குப்பை மேடு உள்ளது. இங்கும் குப்பைகள் நேரத்திற்க்கு அள்ளப்படுவது கிடையாது.

பொதுமக்கள் சுகாதாரம் கருதி இப்பகுதியில் குப்பைகள் விரைந்து அள்ளப்படுமா? இப்பகுதி மக்களின் கோரிக்கையை எற்று இப்பகுதியில் சிமெண்ட் குப்பை தொட்டி கட்டித் தரப்படுமா? பொதுமக்களின் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்கு அதிரை பேரூராட்சி செவி சாய்க்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    பொழைக்க தெரியாவதங்க.‎

    இந்த குப்பைகளை மடகாஸ்கருக்கு ஏற்றுமதி செய்தால் நல்ல இலாபம் ‎கிடைக்கும்.‎

    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
Post a Comment