அதிரை பேருந்து நிலையத்தில் வாடகை கார்கள் பல வருடங்களாக நிறுத்தப்பட்டிருப்பதை நாம் அறிவோம். இந்நிலையில் தற்பொழுது அதிரை பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்தில் நிலையத்தில் டேக்சிகளை நிறுத்துவது குறித்து அதிரை பேரூராட்சிக்கும் பேருந்து நிலைய டேக்ஸி மார்க்கெட் உரிமையாளர்கள் சங்கத்துக்கும் இடையே அமைதிப் பேச்சு வார்த்தை பட்டுக்கோட்டை RDO அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் அதிரை பேரூராட்சி சார்பாக தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை, பேரூராட்சி செயலாளர், கவுன்சிலர்கள் சிவக்குமார், உதயகுமார், அப்பியான் (எ) யூசுஃப், அப்துல் லத்தீப் ஆகியோரும் டேக்சி உரிமையாளர்கள் சார்பாக தலைவர், துணை தலைவர், செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் கலந்துக்கொண்டனர். இன்று காலை 10 மணியளவில் துவங்கிய இந்த பேச்சு வார்த்தை நீண்ட விவாதங்களுக்கு பிறகு 12.15 மணியளவில் நிறைவடைந்தது.
இறுதியில் அதிரை காதிர் முகைதீன் பள்ளி அருகே முத்தம்மாள் தெரு எதிரே புதிய டேக்ஸி மார்க்கெட் அமைப்பது என்று சுமுகமாக முடிவு எடுக்கப்பட்டது. மேலும் கூடிய விரைவில் பேரூராட்சி சார்பாக கட்டப்பட்ட கடைகள் திறக்கப்படும் என எதிர்ப்பாக்ப்படுகிறது.
Advertisement




This comment has been removed by the author.
ReplyDeleteAl Ameen pallivashal kuppai photo podunga pa
ReplyDeleteAl Ameen pallivashal Aruhil kuppayai poduraanunga
ReplyDeletepaludhadaindha kuppai vandhiyai niraya kidakku Adhayum photo eduthu podunga...