யார் கவிஞன்?

0
யார் கவிஞன்?

அன்பின் விழிகளில்
அனைத்திலும்
அழகைக் காண்பவன்

உள்மனத்தில்
ஊடுருவும்
ஊதாகதிர்
உள்ளவன்

உணர்வுகளை
உள்வாங்கி
உணர்வுகளைக்
கொப்பளிப்பவன்

மலரின் வாசத்திலும்
மழலையின் பாசத்திலும்
மண்டிக் கிடப்பதை
மனக்கண்ணாடியில்
பிரதிபலிப்பவன்

காதலைப் பாடுவான்
காமுகனைச் சாடுவான்
வீரத்தைப் போற்றுவான்
வீண்கொலைகளைத் தூற்றுவான்

வண்ணத்துப் பூச்சியின்
எண்ணத்தையும் வார்த்தைக்
கிண்ணத்தில் வடிப்பவன்

சாதிமத வேறுபாடு
சார்ந்திடான்
நீதியொன்றை மட்டும்
நிலைநாட்டுவான்

அக்கினிக் குஞ்சும்
அவனே
அன்புமிகு நெஞ்சும்
அவனே

மகான்களிடம்
மாடு பேசியது
கன்றும் மரமும்
கதைத்தது

கவிஞனிடம்
அசையும் பொருள்
அசையாப் பொருள்
அனைத்தும்
இரகசிய உணர்வால்
இரசித்து இரசித்து
இன்பகீதம் பாய்ச்சும்

”கவியன்பன் கலாம்”

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)