அரபகத்தில் மணற்புயல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

0

புழுதிக் காற்றே என்று
புலம்பிடவில்லை நாங்கள்
அழுதுச் சாற்றவுமில்லை
அவனே அறிவான்


ஆற்றல்மிக்க எங்களின்
அயராத உழைப்புக்கு 
காற்றே நீ தானே
தோற்றுப்போனாய்!


கரைகாணா எங்களின்
கடின உழைப்பைக் கண்டு
அரைநாளுக் குள்ளாக
அடங்கிப் போய் ஒளிந்துவிட்டாய்!



நெருப்பின் ஆற்றலை
நேசரின் நம்பிக்கை வென்றது
விருப்பமுடன் குளிர்ந்தே
வியப்பினைச் சொன்னது


கத்திக்கு ஆற்றலில்லை
கலீலுல்லாஹ்வின்
பக்திக்கு முன்னால்
பணிந்து விட்டது!


கடலுக்கு ஆற்றலில்லை
கலீமுல்லாஹ்வின் கைத்தடியால்
திடலாக மாறியதும்
திகைப்புக்கு ஆளானோர்


அத்தனை ஆற்றலும்
அல்லாஹ் ஒருவனுக்கே!
இத்தரையில் நிகழும்
இவைகளே சான்றுகள்



இறைதூதர்களின் நம்பிக்கைக்கு
இத்தனை ஆற்றலும்
குறையேதும் செய்யாது போலவே
கூவி வந்த புயற்காற்றே


எதிர்நீச்சல் போட்டோம்
எதிர்வந்த  வேகத்தை
எதிர்த்தே போராடினோம்
என்னவாயிற்று உனக்கு?


மண்ணுக்குள் சென்றதும்
மண்ணே எங்களை உண்பாய்
மண்ணையும் உண்டோமின்று
மண்ணுக்குள் செல்லும் முன்பாய்!


உன்னாற்றலுக்கு முன்னெங்கள்
உழைப்பாற்றல் வென்றதை
உன்னையும் எங்களையும்
உருவாக்கியவனிடம் சொன்னாயோ?


“கவியன்பன்” கலாம், அபுதபி



Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)