பத்தாம் வகுப்பு CBSE தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் இந்தியா
முழுவதும் வெளியாகின. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நடைபெறும் இத்தேர்வு SSLC
தேர்வினை விட மிகவும் கடினமானதாகும். இதில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
மதிப்பெண்கள் அடிப்படையில் இல்லாமல் க்ரேடு பாய்ண்டுகள் அடிப்படையில்
வழங்கப்படுகின்றன. இதில் A+ மற்றும் அதற்க்கும் மேல் பெறும் மாணவர்களுக்கு
அதிகபட்ச பாய்ண்டான 10 பாய்ண்டுகள் வழங்கப்பட்டு ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற
பாய்ண்டுகளின் அடிப்படையில் மொத்தமாக சராசரி பாய்ண்டுகள் நிர்ணயிக்கப்ப்படும்.
திருச்சி காஜா நகரில்
உள்ள ஸமது CBSE பள்ளியில் நமதூர் டால்பின் ஹஜ் சர்வீஸ் உரிமையாளர் பதுருத்தீன்
அவர்களின் மகள் பாத்திமா பஹ்மிதா பயின்றார். இவர் நேற்று வெளியான CBSE
தேர்வு முடிவில் அறிவியல் மற்றும் கணிகம் ஆகிய பாடங்களில் A++ கிரேடும் பிற
பாடங்களில் A+ க்ரேடும் பெற்று அனைத்து பாடங்களிலும் அதிகபட்ச பாய்ண்டான 10
பாய்ண்டுகளை பெற்றுள்ளார். இதன் மூலம் இவருடைய மொத்த சராசரியும் 10 பாய்ண்டுகளை
பெற்றுள்ளது. இப்பள்ளியில் இவருடன் சேர்த்து இரண்டு மாணவிகள் மட்டுமே 10 சராசரி
புள்ளிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடினமான CBSE தேர்வில் இம்மாணவி நிகழ்த்தியுள்ள சாதனை
பாராடுக்குறியது. இவருக்கு அதிரை பிறையில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும்
தெரிவித்துக்கொள்கிறோம்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது