அதிரை நிருபர் இணையதளத்தின் சார்பாக "நபிமணியும் நகைச்சுவையும்" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நமதூர் லாவான்யா மஹாலில் காலை 10.10 முதல் துவங்கி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை அப்துல் பாஸித் அவர்கள் கிராஅத் ஓது துவங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு முஹம்மது யூஸிஃப் ஸாலிஹ் தலைமை தாங்கினார். வரவேற்ப்புரையை நஸ்ருத்தீன் சாலிஹ் அவர்கள் ஆற்ற திருமண மண உரை (குத்பா) யை I.A.C.துபாய் நிறுவனர் அஷ்ஷேக் முஹம்மது இக்பால் மதனீ சிறப்பாக ஆற்றினார். இதனை அடுத்து நிக்காஹ் நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து நபிமணியும் நகைச்சுவையும் என்ற நூலை அதிரை நிருபர் ஆசிரியர் குழுவினர் வெளியிட்டனர். இதனை தொடர்ந்து வாழ்த்துரையை முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும், பிறை மேடை மாத இதழ் ஆசிரியருமான M.அப்துல் ரஹ்மான் அவர்களும், சமுக நீதி முரசு மாத இதழின் ஆசிரியர் CMN சலீம் அவர்களும், அரசியல் விமர்சகரும், இதழாசிரியருமான ஆளூர் ஷாநவாஸ் அவர்களும் ஆற்றினார்கள். இதனை தொடர்ந்து திருமண வலிமா விருந்து நடைபெற்றது.
இந்த விழா ஏராளமான ஊடக வாதிகள், சமுக ஆர்வலர்கள், அரசியல் ஆர்வலர்கள், உலமாக்கள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.






Advertisement








மாஷா அல்லாஹ் எங்களுக்கு புகழ்பாடும் விழா முக்கியம் அல்ல இறைவனின் தொழுகை தான் முக்கியம் என பல பிரபலம் விழாவில் கலந்துக்கொண்டாலும் தொழுகையை நிலைநாட்டிய உங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக மேலும் இதுபோல் அதிரை நியூஸும் செய்து இருந்திருந்தால் அவர்களும் ஓர் சிறந்த எடுத்து காட்டாக இருந்திருப்பார்கள்
ReplyDelete