FLASH NEWS: அதிரை அருகே சாலை விபத்து- அதிரையர்கள் படுகாயம்

1
இன்று மாலை மல்லிப்பட்டினத்தில் இருந்து அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர்கள் ஆம்னி வேனில் அதிரையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். 

இந்நிலையில் இராஜாமடம் பள்ளி அருகே குடி போதையில்
தாறுமாராக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர்களின் வாகனத்தின் மீது அதிரையர்கள் வந்துகொண்டிருந்த ஆம்னி வேண் மோதாமல் இருக்க வேணின் ஓட்டுனர் வேகமாக வண்டியை திருப்பியுள்ளார். 

இதனால் நிலைத்தடுமாறிய வாகனம் தலைகுப்பற கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள் உட்பட அதிரையை சேர்ந்த ஏழு பேர் காயம் அடைந்துள்ளனர். 

காயம் அடைந்தவர்களை முதற்க்கட்டமாக அதிரை டாக்டர் மீராசா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. 

மேலும் மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது முதற்க்கட்ட தகவலின் மூலம் தெரிய வருகிறது.

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. விபத்து நடந்த பகுதியில் இருக்கும் மதுக்கடையை அகற்றவேண்டும்

    ReplyDelete
Post a Comment