அதிரை பேருந்தில் மக்களை வியக்க வைத்த முதியவர்..!

Editorial
1


வெள்ளிக்கிழமை இரவு 7:40 மணி, பட்டுக்கோட்டை பேருந்து நிலையம். திருச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நான் பயின்று வருகிறேன். சனிக் கிழமை, ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறைக்காக ஊருக்கு வந்து கொண்டிருந்தேன். திருச்சியில் இருந்து பட்டுக்கோட்டை வரை நின்றுக்கொண்டே பயணம் செய்த களைப்பு. எப்படியாவது பட்டுக்கோடையில் ஒரு பேருந்தில் இறுக்கை பிடித்து அமர்ந்து விட வேண்டும் என்று எண்ணி அவசரமாக தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு வந்த பேருந்தில் இருந்து இறங்கி அதிரை பேருந்துகள் நிற்க்கும் இடத்திற்க்கு வந்த எனக்கு ஒரு வியப்பு, முன்னால் நின்ற பேருந்தில் ஒரு இறுக்கை கூட மிச்சம் இல்லை.  

அதனால் அந்த பேருந்தில் ஏறும் எண்ண‌த்தை கைவிட்டு அடுத்த பேருந்துக்காக காத்திருந்தேன். முதல் பேருந்து புறப்பட்டத்தும் அடுத்த பேருந்து வந்தது. அந்த பேருந்திலும் சில இறுக்கைகளே மிச்சம் இருந்தது, எனவே அந்த பேருந்தில் விரைவாக ஏறினேன். அதற்க்குள் நேரம் 8:00 மணியை தாண்டியது. பேருந்து புறப்பட இன்னும் 15 நிமிடம் ஆகும் என நடத்துனர் கூற தெரிந்தகொண்டேன். ஒரு நல்ல ஜன்னல் ஓர இருக்கை காலியாக இருப்பது என் கண்களுக்கு தென்பட்டது. உடனே அந்த இறுக்கையில் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாரினேன். ஒன்று அல்லது இரண்டு நிமிடம் கழித்து பின்னால் ஒரு சத்தம்....(மச்சான்..! எப்புடிடா இருக்கிறா? பாத்து ரொம்ப நாள் ஆகுது.. படிப்பு எப்புடி போது?) அது என் பள்ளி பருவ நண்பனின் குரல். அவன் அப்பொழுது தான் பேருந்தில் ஏறினான். உடனே அவனை எனக்கு அருகில் உள்ள இருக்கையில் அமரச் செய்தேன். நாங்கள் எங்கள் பள்ளிக்கூட நிகழ்வுகளைப் பற்றியும், என் கல்லூரி அனுபவங்களைப் பற்றியும், ஊர் நிலவர‌ங்களைப் பற்றியும் பகிர்ந்துக்கொண்டோம். 

சில நேரத்துக்கு பின்....60 -65 வயதுள்ள ஒரு முதியவர் பேருந்தில் ஒரு அழுக்கு படிந்த பையை தன் கையில் ஏந்தியவாறு ஏறினார். பின்னர் அவர் தான் கொண்டு வந்திருந்த ஒரு பையில் இருந்து கட்டுக்கட்டாக சிறிய அளவிலான புத்தகங்களை எடுத்தார்.


அவரது நடவடிக்கைகளை நான் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். அவர் அந்த சிறிய புத்தகத்தை திறந்து அதில் இருந்து ஒரு கருப்பு வரிகள் இட்ட உள்ளங்கை அளவிலான ஒரு பாலிதீன் தாளை எடுத்தார். அவர் கையில் வைத்திருந்த புத்தகத்தில் மேல் அந்த பாலிதீன் தாளை வைத்து தேய்த்தார். உடனே அந்த புத்தகத்தில் ஏதோ குதிரை ஓடுவது போன்ற காட்சி. எனக்கு ஒரே ஆச்சரியம். நான் இறுக்கையில் இருந்து அந்த நப‌ரை கையசத்து அழைத்தேன். அவர் எனதருகில் வந்தார். 

அவரிடம் இதை மீண்டும் செய்து காட்டுங்கள் என்று கூறினேன். அவர் எந்த அசைவும் நின்றுக்கொண்டிருந்தார். அப்பொழுது தான் எனக்கு புரிந்தது அவருக்கு காது கேட்காது, வாயும் பேச இயலாது என்று. அவரை கண்டு மிகவும் பரிதாபத்துடன் அந்த புத்தகம் எவ்வளவு என்று கையசைவால் கேட்டேன். உடனே அவர் பத்து ரூபாய் என தனது பத்து விரல்களையும் காட்டிய பொழுது எனக்கு விளங்கியது. உடனே நான் அவரிடம் பத்து ரூபாய் கொடுத்து அந்த புத்தகத்தை வாங்கினேன். 

அந்த புத்தகத்தில் ஒன்பது வகையான படங்கள் இருந்தன‌, வாய்பேசாத சூழ்நிலையில் அரவனைக்க கூட ஆள் இல்லாத சமயத்திலும் உழைத்து நேர்மையாக வாழ வேண்டும் என்று ஒவ்வொரு பேருந்திலும் ஏறி இறங்கி கடும் சிரமங்களுக்கு மத்தியில் கையசைவால் விற்பனை செய்த அந்த முதியவரை கண்டு நான் மட்டுமல்ல அந்த பேருந்தே வியந்தது...! , அதில் அந்த கருப்பு வரியிட்ட பாலிதீன் தாலை வைத்து தேய்த்தால் அந்த படங்கள் உன்மையிலேயே அசைவது போன்ற காட்சி மிகவும் அருமையாக இருந்தது. நான் இன்று இரவில் வாங்கியது தான் அவரது இன்றைய முதல் விற்பனை என்பது அவர் அந்த புத்தகக் கட்டை புதிதாக எடுத்து எனக்கு தரும் பொழுது விளங்கியது. நான் வாங்கியதும் அவர் முகத்தில் சிறிய மகிழ்ச்சியைக் கண்டேன். 



இந்த தள்ளாத வயதில், வாய்பேசாத சூழ்நிலையில் அரவனைக்க கூட ஆள் இல்லாத சமயத்திலும் உழைத்து நேர்மையாக வாழ வேண்டும் என்று ஒவ்வொரு பேருந்திலும் ஏறி இறங்கி கடும் சிரமங்களுக்கு மத்தியில் கையசைவால் விற்பனை செய்த அந்த முதியவரை கண்டு நான் மட்டுமல்ல அந்த பேருந்தே வியந்தது...!




இது போன்ற ஒரு பொருள் சூப்பர் மார்க்கெட்டுகளில் அதிக விலைக்கு விற்பனை செய்தால் அதை மறுக்காமல் அச்சரியத்துடன் வாங்கும் நாம் இது போன்ற நபர்களிடம் குறைந்த விலைக்கு ஏனோ வாங்குவதற்க்கு தயங்குகிறோம்.

ஆக்கம்: அதிரை பிறை நூருல் 




Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment