மலிவுபுரமா? மவுலிபுரமா?

0

”அண்மையில் சென்னையில் இடிந்து விழுந்தது பலமாடிக் கட்டிடம்” செய்தி




பொலிவு தருவதாம் பலமாடி
பொழுதில் விழுவது கலையாகி
மலிவு புரமென உருவாகி
மனித உயிரெலாம் மலிவாகி!

மணலும் தரமிலை விலைபேசும்
மனமும் சரியிலை பணமாகி
பிணமும் குவிதலே நிலையாகி
பிழைகள் செய்வது  பெரிதாகி!


விலையும் கிடுகிடு உயர்வாகி
விற்று வருவது தொழிலாகி
கொலையும் செய்திடும் நிலைபோல
குழியில் புதையுதே உயிர்யாவும்!


கடமை தவறிய அதிகாரம்
கலவை சிதறிய சதியாகும்
மடமை இதுவென புரியாமல்
மனித உயிர்களை மதியாமை!

”இடியும் விழுவது இயல்பாகும்:
இதுவும் தருவது இடிபாடு”
மடியில் பணமதை நிறைவாக
வளரும் நிலையிலும் குறைபாடு!

மனிதம் உழலுது நிஜமாக
மனமும் உதவுது பெரிதாக
புனிதம் பெறுவது இவராலே
பொழுதில் விரைவது அரிதாகும்!

:”கவியன்பன் “ கலாம்
--
 




Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)