பர்மிய முஸ்லிம் படுகின்ற வேதனை
தர்மம் நியாயம் தலைகீழாய்ப் போனதை
புத்தன் பெயரில் புரியும் படுகொலை
நித்தம் அழுதேன் நினைத்து
பச்சிளம் பாலகர்ப் பற்றிய நோன்பினை
மெச்சியும் பார்த்து மெழுகாய் உருகினன்
நாதி யிலாநிலை நாட்டில் அகதியாய்;
நீதி வழங்குவாய் நீ
தாயை இழந்து தவிக்கும் குழந்தையை
நாயாய்க் கருதி நடுவீதி(யில்) சுட்டுப்
பொசுக்கும் மிருகமாய்ப் போனர்; இனத்தை
நசுக்கு மிவர்கள் நடப்பு


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது